கொழும்பில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிடவர்கள் இன்று நாடாளுமன்றத்திற்கு முன்பாக அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
நாடாளுமன்றத்திற்கு செல்லும் வழியில் பத்தரமுல்லையில் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மின் கட்டண அதிகரிப்பு
மின் கட்டண அதிகரிப்பு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றின் விலைகளை குறைக்குமாறு கோரியும் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். அதேசமயம் இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசனும் கலந்துகொண்டிருந்தார்.