பிரித்தானியா உக்ரைனின் நண்பனாக வாழ்நாள் முழுக்க இருக்கும் என அந்நாட்டு பிரதமர் வேட்பாளரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி மந்திரியுமான ரிஷி சுனக் (Rishi Sunak) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாடு சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து இன்றுடன் 31 ஆண்டுகள் நிறைவடைகிறது. அந்தவகையில் உக்ரைன் இன்று 31 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு சுதந்திர நாள் வாழ்த்து தெரிவித்து பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது,
உக்ரைனின் உறுதியான மன தைரியத்தை பாராட்ட வேண்டும். பிரித்தானியா உக்ரைனின் வாழ்நாள் முழுக்க நண்பனாக இருக்கும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
இரு நாடுகளுக்கு இடையிலான கலாசாரம், வணிக உறவு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பது நம்மை மேலும் வளப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரஷ்யா மீது உக்ரைன் போர் தொடுத்து இன்றுடன் ஆறு மாதங்கள் நிறைவுறுவது குறிப்பிடத்தக்கது.