மீண்டும் களமிறங்கிய காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்!

0
617

கொழும்பு கொம்பணி தெரு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக காலிமுகத்திடல் போராட்டகார்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்களின் கீழ் பொலிஸாரினால் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

மீண்டும் போராட்டம்

இந்நிலையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யக் கோரியும், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் பொலிஸாரினால் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதற்கு எதிராகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் ருவான் விஜயமுனி என்ற ஒரு நபர் கொழும்பு கொம்பணி தெரு பொலிஸ் நிலையத்தில் இன்று முன்னிலையாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.