கடுமையான வறட்சி; இரண்டாம் உலகப் போரில் மூழ்கிய போர்க்கப்பல்கள் வெளிப்பட்டன

0
444

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியாவில் கடும் வறட்சி காரணமாக ஆற்றில் நீர்மட்டம் குறைந்ததால் இரண்டாம் உலகப் போரில் மூழ்கிய ஜெர்மனியின் போர்க்கப்பல்கள் வெளியே தெரிகின்றன.

1944ஆம் ஆண்டு ஜெர்மனியின் நாஜி படையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போர்க்கப்பல்கள் சோவியத் படைகளுக்கு எதிரான தாக்குதலை கைவிட்டு பின்வாங்கிய போது, செர்பியாவின் பிரஹோவா பகுதி அருகே தனூப் ஆற்றில் இந்த போர்க்கப்பல் மூழ்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த போர்க் கப்பல்களில் பயன்படுத்தாமல் இருந்த ஏராளமான வெடிகுண்டுகள் மற்றும் வெடிப்பொருட்கள் ஆறுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.