98 வயதில் பட்டப்படிப்பை முடித்த முதியவர்!

0
412

இத்தாலியில் வசித்து வந்த 98 வயதான பேட்டெர்னோ என்ற முதியவர் முதுகலை பட்டம் பெற்று சாதனா படைத்துள்ளார்.

இவர் தனது இளமை காலத்தில் வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி கடற்படை, ரயில்வே ஆகியவற்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் தனது இளம் வயதில் தவறவிட்ட படிப்பை வயதான காலத்தில் மீண்டும் தொடர நினைத்த பேட்டெர்னோ, அதற்காக கல்லூரியில் சேர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு பாலெர்மோ பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து முதுகலை பட்டம் பெற நினைத்த அவர் தற்போது வரலாறு மற்றும் தத்துவ பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

விடாமுயற்சியால் தள்ளாத வயதிலும் கல்வி பயில்வதில் ஆர்வம் கொண்ட முதியவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.