இலங்கையில் ஏற்பட்ட டொலர் நெருக்கடியால் நாட்டிற்குள் பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி ஒரு சமூக நெருக்கடி உருவாகியுள்ளது.
இந்த சமூக நெருக்கடி தற்போது அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி (Azath Salley) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அளித்த போட்டி ஒன்றிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்தது,
கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டிற்கு அழிவை கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் மக்கள் ஒன்றுபடவேண்டும். அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்றுபட்டுதான் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொண்டுவர வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் வீடொன்றில் ஒரே ஒரு பெண்மணி இருந்த நிலையில் அந்த வீட்டிற்கு பொலிஸார் சென்றுள்ளார்.
எப்படி ஒரு பெண்மணி தனியாக இருக்கும் வீட்டிற்கு ஒரு பெண் பொலிஸ் கூட இல்லாமல் செல்லமுடியும் என அசாத் சலி அவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை மேலும் பல பகீர் தகவலை அவர் காணொளியில் தெரிவித்துள்ளார்.