துப்பாக்கிச் சூட்டுக்கு முப்படையினருக்கு அனுமதி!

0
509

பொதுச் சொத்துக்களைத் திருடுபவர்கள் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்துபவர்கள் மீது துப்பாக்கிகளைத் திறக்க முப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்று காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பான விரிவான அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் 6 பேரும் தென் மாகாணத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 68 வீடுகள் மற்றும் 47 வாகனங்கள் எரிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 வீடுகள் மற்றும் 41 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.