இலங்கை எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அந்நாட்டிற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்குவது குறித்து ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியைஇலங்கை நிதியமைச்சை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது.
பலதரப்பு கடன் வழங்குனர்களிடமிருந்து, அரச வங்கிகளுக்கான அந்நிய செலாவணி கையிருப்பு ஆதரவை இலங்கை கோரிவருவதாக அதில் மேலும் தெரிவித்துள்ளது.