ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ இந்த தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் ” பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அமைச்சரவை பதவி விலக வேண்டும். ஜனாதிபதியின் விருப்பத்துக்கமைய இடைக்கால அரசு அமைய வேண்டும் . அதற்கு வழிவிடும் வகையிலான யோசனையொன்று ஜனாதிபதியிடம் இன்று முன்வைக்கப்பட்டது.
மேலும் நாடாளுமன்றத்தில் 113 என்பதைவிடவும், மக்களின் கோரிக்கையே எமக்கு முக்கியம்.” என்று இராஜாங்க அமைச்சர் அருந்திக்க கூறியுள்ளார்.