மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஹரி சிங் உணவகம் நடத்தி வருகிறார். நேற்று இங்கு குடிபோதையில் வந்த வினோத் அஹிர்வார், ஓட்டல் உரிமையாளரிடம் கேட்காமல் சமோசாவை எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஹரி சிங் அந்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஹரி சிங், வினோத் அஹிர்வாரின் தலையில் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஓட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மகனை கைது செய்தனர். ஓட்டல் உரிமையாளரிடம் கேட்காமல் சமோசா சாப்பிட்டதற்காக ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.