ரமலான் கொண்டாட நாடு திரும்பும் நவாஸ்…. அரசு சார்பில் பாஸ்போர்ட்….

0
432

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்  நாடு திரும்புவதற்கு அரசு சார்பில் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் மூன்று முறை பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப் (72). இவர் மீது இம்ரான் கான் ஆட்சி நடைபெறும் போது ஊழல் வழக்கு போடப்பட்டது. இதனை தொடர்ந்து 2019 ஆம் வருடம் உடல்நிலை குறைவால் சிகிச்சைக்காக லண்டன் செல்வதற்கு லாகூர் உயர் நீதிமன்றம் 4வார காலம் அனுமதி வழங்கப்பட்டது.

அதன்பிறகு அவர் பாகிஸ்தான் திரும்பவில்லை. இந்த நிலையில் நவாஸ் ஷெரிப் ரமலான் கொண்டாட பாகிஸ்தான் திரும்ப போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தற்போதைய பாகிஸ்தானின் பிரதமரும், சகோதரருமான பிரதமர் ஷெபாஸ் நவாஸ்பாகிஸ்தான் திரும்புவதற்கு அரசு சார்பில் பாஸ்போர்ட் விநியோகிக்க உத்தரவிட்டுள்ளார்.