பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்!

0
580

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இரு வார கால ஆய்வு மற்றும் சுற்றுலா சென்ற தனியார் விண்வெளி வீரர்கள் குழு பத்திரமாக பூமிக்கு திரும்பியது.

தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஆக்ஸியம், எலான் மஸ்க்கின் ஸ்பேக்ஸ் எக்ஸ், மற்றும் நாசா கூட்டாக இணைந்து 4 பேர் கொண்ட தனியார் குழுவை விண்வெளி ஆராய்ச்சிக்கு அனுப்பியது.

14 நாட்கள் தொடர் ஆராய்ச்சியை முடித்த நால்வர் குழு மீண்டும் பூமிக்கு திரும்பியது. 16 மணி நேர பயணத்திற்கு பின் விண்வெளி குழுவின் கேப்சியூல் புளோரிடா கடற்பகுதியில் பத்திரமாக தரையிறங்கியது.