யாழ்பாணத்திற்கு வருகை தந்த அமெரிக்க தூதுவர்!

0
570

யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் (Julie Chung),  அவர் யாழில் சிவில் சமூக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர் ஜூலி சுங் (Julie Chung) , கொக்குவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ள நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமி, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க தூதர் (Julie Chung0,

எந்தவொரு ஜனநாயகத்திலும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் உரிமைகளுக்காக வாதிடுவதில் சிவில் சமூகம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இன்றைய அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் குறித்து விவாதிப்பதற்கும் ஜனநாயக இலங்கைக்கான எமது ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதற்கும் நான் யாழ்ப்பாணத்தில் சிவில் சமூகத் தலைவர்களைச் சந்தித்ததாக கூறியுள்ளார்.

அதேவேளை முன்னதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங்கை, (Julie Chung)யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாப்பா சந்தித்து கலந்துரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.