சதொச விற்பனை நிலையங்களில் அரிசி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0
679

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி சதொச விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசி வாடிக்கையாளரொருவருக்கு அதிகபட்சமாக 5 கிலோ வீதம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய வெள்ளை அரிசி – கிலோ 145 ரூபாய், நாட்டு அரிசி – கிலோ 145 ரூபாய், சம்பா அரிசி – கிலோ ரூ.175 என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.