துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவருக்கு காலிமுகத்திடலில் மெளன அஞ்சலி!

0
523

இலங்கையில் எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து ரம்புக்கனை புகையிரத கடவைக்கு அருகில் புகையிரத பாதையை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை தொடர்ந்து அங்கு மோதல் வெடித்தது.

ரம்புக்கணையில் ஆர்ப்பாட்டம் செய்த மக்களை கலைக்க கண்ணீர்ப்புகை தாக்குதலை நடத்திய பொலிஸார் அதன் பின்னர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்தவருக்கு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.