தரையிறங்கியபோது இரண்டாக பிளந்த மிகப்பெரிய விமானம்

0
279

மிகப்பெரிய சரக்கு விமானம் ஒன்று தரையிரக்கப்பட்டபோது இரண்டாக உடைந்து துண்டான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கோஸ்டாரிகா தீவில் உள்ள ஹுவான் சாண்டா மரியா பன்னாட்டு விமான நிலையத்திற்கு டி.ஹெச்.எல் நிறுவனத்தின் மிகப்பெரிய சரக்கு விமானம் ஒன்று ஜெர்மனியிலிருந்து சரக்கு ஏற்றி வந்துள்ளது.

இதன்போது விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில் தரையில் மோதிய விமான இரு துண்டாக உடைந்தது.

இதனால் விமானம் தீப்பிடிக்க தொடங்கி நிலையில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.