தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கடுமையான முறையான மாற்றங்களைக் கோரும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் ஏப்ரல் 19ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தீர்மானித்துள்ளது. அத்துடன் FUTA காலி முகத்திடலில் எதிர்ப்பு பேரணியை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.