பிரிட்டன் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற புலம்பெயர் மக்கள் தொடர்பான முடிவு

0
312

பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக ஆங்கில கால்வாயை கடந்து பிரவேசிக்கும் மக்களை ஆபிரிக்க நாடானா உகண்டாவிற்கு அனுப்பும் பிரித்தானிய அரசின் நடவடிக்கைக்கு அந்நாட்டு மக்கள் தமது பலத்த ஆதரவை அளித்துள்ளனர்.

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில், இரண்டு பேரில் ஒருவர் புலம்பெயர்வோரை ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் பொறிஸ் ஜோன்சனின் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது.

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்ஸன், ருவாண்டா உலகிலுள்ள பாதுகாப்பான நாடுகளுள் ஒன்று என்று வலியுறுத்திய நிலையில், பிரித்தானிய உள்துறை செயலர் பிரீத்தி பட்டேல், பிரித்தானியாவுக்கு வரும் சட்ட விரோத புலம்பெயர்வோரை ருவாண்டாவுக்கு அனுப்புவது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.