அலரி மாளிகையை முற்றுகையிட்ட பெரும் திரளான மக்கள்!

0
531

அலரி மாளிகையை முற்றுகையிட்டு பெரும் திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலரிமாளிகைக்கு செல்லும் பகுதி தற்போது வீதித் தடைகளால் தடைப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் பெரும் சத்தத்துடன் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். கையில் தேசியக் கொடியுடன் சாலை தடுப்புகளில் ஏறி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அப்பகுதியில் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.