தமிழில் பேசி காளான் பிரியாணி ருசித்து மகிழ்ந்தார் ராகுல் காந்தி

0
412

தமிழகத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதன்படி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ எனும் கிராமத்து சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காளான் பிரியாணியை ருசித்து உண்டு மகிழ்ந்துள்ளார்.

சமூக வலைத்தளமான யூடியூபில் பிரபலமான ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ நடத்தி வரும் குழுவினர் சமைக்கும் இடத்திற்கு சென்ற ராகுல் காந்தி, அவர்களுடன் சில வார்த்தைகள் தமிழில் உரையாடியுள்ளார்.

பின்னர் ஓலைப்பாயில் அமர்ந்து குறித்த குழுவினருடன் சகஜமாக காளான் பிரியாணியை தலைவாழை இலையில் உண்டு மகிழ்ந்தார்.

“நல்லா இருக்கு ரொம்ப நல்லா இருக்கு” என காளான் பிரியாணியின் ருசி குறித்து தனது கருத்தையும் பதிவு செய்தார் ராகுல்.