சர்ச்சைக்குரிய மத போதகர் மற்றும் அவரது மனைவியிடம் 1226 கோடி ரூபா பணம்..

0
228

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் அவரது மனைவியிடம் உள்ள 1226 கோடி ரூபா பணம் தொடர்பில் பணம் தூய்மையாக்கல் விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணைகளை இரகசியப் பொலிஸார் நிறுத்தியுள்ளமை ஆச்சரியமளிப்பதாக சட்டமா அதிபர் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்கும் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷவீந்திர விக்கிரம இந்த அறிவித்தலை விடுத்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம்

இந்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி.என்.சமரகோன் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

மனு தொடர்பான சில ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைக்க நம்புவதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ஷாவிந்த விக்ரம தெரிவித்தார்.