prissiness officer torture court human rights council
வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் பராமரிப்பு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக கைதியொருவர் அண்மையில் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்;.
இந்த நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி ஆர். எம் வசந்தராஜா தலைமையிலான குழுவினர் சிறைச்சாலையில் கைதிகளிடம் நீண்ட நேரம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
விளக்கமறியல் சிறைக்கைதி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு அழைத்துவரப்பட்டபோது விளக்கமறியல் சிறைச்சாலையில் இடம்பெறும் கைதிகளுக்கு எதிரான அநீதிகளை சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன் பின்னர் நேற்று முன் தினம் சட்டத்தரணிகளும் சிறைச்சாலை அநீதிகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இன்று காலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைதிகளிடம் விசாரணைகள் மேற்கொண்டிருந்தனர்.
சிறைச்சாலையிலுள்ள கைதிகளிடமும் சிறைச்சாலை அதிகாரிகளிடமும் சிறைக்காவலர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பெண் கைதிகளை நீதிமன்றிற்கு அழைத்து செல்லும் போதும் பின்னர் சிறைச்சாலைக்கு அழைத்து வரும் சந்தர்ப்பங்களிலும் பாரிய அநீதிகள் இழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
prissiness officer torture court human rights council
More Tamil News
- வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது
- வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை
- வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குற்றமற்றவர்; சபையில் கடும் எதிர்ப்பு
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- யாழில். எரிபொருட்களை பதுக்க முயற்சி; வரிசையில் காத்திருந்த மக்கள்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com