மன்னாரைச் சேர்ந்த இளம் குடும்ப பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் இரு பிள்ளைகளை தவிக்கவிட்டு கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக தனிமையில் வாழ்ந்து வருவதுடன் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.
குறித்த பெண் தற்போது மன்னார் உட்பட சில மாவட்டங்களுக்குச் சென்று தங்கி வருவதோடு புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்களுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு பணம் பறித்து வருவதாகவும் தெரியவருகிறது.
புகைப்படங்களை அனுப்பி பணம் சேகரிப்பு
அதுமட்டுமல்லாது தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பி அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி பணம் பெற்று வருகின்றமையும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் குடும்பத்தை பிரிந்து சமூக சீர்கேடு விடையங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த பெண் தொடர்பாக வெளிநாடுகளில் உள்ளவர்கள் விழிப்புடன் செயல்படு மாறும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் தற்போது மத்திய கிழக்கில் உள்ள நாடு ஒன்றில் வசிக்கும் குடும்பம் ஒன்றிடம் சுமார் 5 இலட்சம் ரூபாவை பெற்று தற்போது அவர்களுடனான தொடர்பை துண்டித்து உள்ளதாகவும் அறிய முடிகின்றது