3 மாத குழந்தையுடன் விபத்தில் சிக்கிய தாய் தனது குழந்தையை மார்போடு அணைத்து காப்பாற்றிவிட்டு இறுதியில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனைக்கு சென்ற தம்பதி
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டு வேலுரான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சிநேயன் (48). இவரது மகள் சந்திரலேகா (27) என்பவரது 3 மாத குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிரே வந்து மோதியதில் தம்பதிகள் இருவரும் குழுந்தையுடன் தூக்கி வீசப்பட்டனர்.
மார்போடு அணைக்கப்பட்ட குழந்தை
சந்திரலேகா தனது கையால் குழந்தையை கீழே விழாமல் மார்போடு அணைத்துக்கொண்டு எந்த வித காயமின்றி காப்பாற்றினார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆஞ்சிநேயன், சந்திரலேகாவை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக சந்திரலேகாவை தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சந்திரலேகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து பொலிசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.