காலி முகத்திடல் கோட்டா கோ கமவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரின் சீருடைகளை அவமதிக்கும் வகையில் ஆடை அணிந்த 35 வயது செயற்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை கொம்பனித் தெரு பொலிஸார் கைது செய்துள்ளனர் .
கைதான சந்தேக நபர் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவித்த பொலிஸார், அவரை நாளை கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.