அடுத்த மூன்று நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் டீசல் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் இலங்கைக்கு மேலும் மூன்று கப்பல்கள் வரவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் நாட்டுக்கு போதுமான எரிபொருள் கிடைக்கும் என்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
1190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்பட உள்ளதால், வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.