நவம்பர் 13 பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்ததாக பொய் தகவல் வழங்கிய பரிசைச் சேர்ந்த பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2015 paris attacker claim
பரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், நவம்பர் 13, 2015 இல் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில், தாம் காயமடைந்ததாக இதுவரை €20,000 க்கள் நஷ்ட ஈடு பெற்றுக்கொண்ட Alexandra Damien எனும் 34 வயதுடைய பெண்ணுக்கே இச்சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த பெண், lநவம்பர் 13 ஆம் திகதி பத்தகலோன் திரையரங்கில் தாம் இசை நிகழ்ச்சி பார்க்கச் சென்றிருந்ததாகவும், அதன்போது தாம் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்ததாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் பத்தகலோன் அரங்கின் போலியான நுழைவுச் சிட்டையும் சமர்ப்பித்திருந்தார். மேலும், அந்த தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.