பிரான்ஸில் நபர் ஒருவரின் அட்டையை பறித்து கடவுச்சொல்லை மிரட்டி வாங்கி பணத்தினை திருடிய சம்பவம் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. Paris rue Barbette road robbery
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11.25 மணி அளவில், பரிஸ் மூன்றாம் வட்டாரத்தில் உள்ள rue Barbette வீதியில் இடம்பெற்றுள்ளது. 28 வயதுடைய நபர் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது.
அதன் பின்னர் அவரிடம் இருந்த வங்கி அட்டை, தொலைபேசி, கார் சாவி அனைத்தையும் பறித்துள்ளனர். வங்கி அட்டையோடு, கடவுச் சொல்லையும் மிரட்டி வாங்கியுள்ளனர். பின்னர் ATM இல் அவரது கணக்கில் இருந்த €600 க்கள் பணத்தினை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த நபரது தொலைபேசியையும் பறித்துச் சென்றதால் உடனடியாக காவல்துறையினருக்கு அழைக்க முடியவில்லை என பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். குறித்த நபர் தாக்கப்பட்ட போதும் காயங்கள் எதுவும் இல்லை எனவும், காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.