ஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகமா அபிஷேக் மேல?

11
1206
aishwarya rai doubt abhishek

ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் திருமணம் நடந்து ஆராத்யா எனும் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மகள் ஆராத்யா பிறந்த பிறகு ஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகம் அதிகரித்துவிட்டதாக கணவர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.aishwarya rai doubt abhishek

ஐஸ்வர்யா ராய் கர்ப்பமானதும் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். ஆராத்யா பிறந்து, ஓரளவுக்கு வளர்ந்த பிறகே மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் அவரின் கணவர் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகம் அதிகரித்துவிட்டதாக பெட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

என்னால் மீண்டும் நடிக்க முடியுமா, பழையபடி முன்னுக்கு வர முடியுமா, விட்ட இடத்தில் இருந்து தொடர முடியுமா, புகழ் பெற முடியுமா என்று அவருக்கு ஒரே சந்தேகம்.

நான் நடிப்பில் இருந்து இரு ஆண்டுகள் ஓய்வு எடுத்தேன். என் பெற்றோரும் சரி, ஐஸ்வர்யா ராயும் சரி அதற்கு எதுவும் சொல்லவில்லை. அவர்கள் என்னுடைய உணர்வுகளை புரிந்து கொண்டார்கள்.

ஆனால், நான் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லவில்லை. நான் நினைத்த வகையில் சரியான படம் கிடைக்க 2 ஆண்டுகள் ஆகி விட்டது. அந்த இரண்டு ஆண்டும் என் குடும்பத்தார் எனக்கு பெரும் ஆதரவாக இருந்தனர் என்றார் அபிஷேக் பச்சன்.

மேலும், அபிஷேக் பச்சன் தற்போது மன்மர்சியான் படத்தில் அனுராக் கஷ்யப்பின் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தப்ஸி நடிக்கிறார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்