யாழ்ப்பாணம் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இடம்பெற்று வருகின்றது.
திருவிழாவின் 22ஆம் நாளான இன்று மாம்பழ திருவிழா (தெண்டாயுதபாணி உற்சவம்) சிறப்பாக நடைபெற்ற நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த குழந்தையொன்று பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தெண்டாயுதபாணி போல வஸ்திரம் அணிந்த குழந்தை ஆலயத்தின் முன் மாம்பழத்துடன் அமர்ந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.