பிரான்ஸில் பேசுபொருளான இளைஞர் வன்முறை: யதார்த்தமா அல்லது அரசியல் கருவியா?

0
41

பிரான்ஸில் இளைஞர்கள் மத்தியில் வன்முறை மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி 2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்றுBவரையான காலப்பகுதியில் இளைஞர்களை உள்ளடக்கிய வன்முறைகள் மற்றும் குற்றங்கள் குறித்து பிரான்ஸ் ஊடகங்கள் பெருமளவில் அறிக்கையிட்டு வருகின்றன.

பிரான்ஸின் மான்ட்பெல்லியரில் (Montpellier) உள்ள பாடசாலை ஒன்றுக்கு வெளியே தாக்கப்பட்ட நிலையில், 14 வயது சிறுமி சுயநினைவின்றி விடப்பட்டு சில நாட்களுக்குப் பின்னர், மற்றுமொரு பாடசாலையின் 15 வயது மாணவன் சில இளைஞர்களால் அடித்துக்கொள்ளப்பட்டார்.

இந்த சம்பவங்கள் பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் (Gabriel Attal) இளைஞர்களின் வன்முறை குறித்த பொது ஆலோசனையை அறிவிக்க வழிவகுத்தது.

சமூகவியலாளர் மறுப்பு

வன்முறை, குற்றச் செயல்களில் இளைஞர்கள் அதிகளவில் பிரதிநிதித்துவம் செய்வதாக பொலிஸாரின் தரவுகள் சுட்டிக்காட்டினாலும், 1993 ஆம் ஆண்டில் காணப்பட்ட எண்ணிக்கை தற்போது மூன்றில் ஒரு பங்காக குறைவடைந்துள்ளதாக சமூகவியலாளர் லாரன்ட் முச்சியெல்லி தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் ஊடகங்கள் அதிக கவனம் செலுத்துவதுதான் எண்ணிக்கை அதிகரிப்பைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகளே இவ்வாறான விடயங்களை வெளிப்படுத்துவதாகவும் இந்த நிலைமைக்கு எதிர்வரும் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் காரணமாகும் எனவும் முச்சியெல்லி சுட்டிக்காட்டியுள்ளார்.

குடிவரவு இணைப்பு

தீவிர வலதுசாரிகள் இளைஞர்களின் வன்முறைக்கு எதிராக மேலும் ஒடுக்குமுறைக்கு அழைப்பு விடுத்து, அதனை குடியேற்றத்துடன் தொடர்புபடுத்தும் வகையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

அரசியல் கவனம் பொதுவாக இளைஞர்கள் மீது இருந்தாலும், அது உண்மையில் புலம்பெயர்ந்த பின்னணியைக் கொண்ட இளைஞர்களை இலக்காகக் கொண்டுள்ளதாக முச்சியெல்லி குறிப்பிட்டுள்ளார்.

80களின் பிற்பகுதியில் இருந்து இளைஞர் வன்முறை என்பது உண்மையில் போதைப்பொருள், வன்முறை, கலவரம் மற்றும் மத தீவிரமயமாக்கல் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குழுக்களின் செல்வாக்கு

புள்ளிவிவரங்கள் இளைஞர்களால் வன்முறையில் அதிகரிப்பைக் காட்டவில்லை என்ற போதிலும், நாடு முழுவதும் குறைந்த சமூகப் பொருளாதாரப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை ஈர்க்கும் குற்றச் செயல்களை முன்னெடுக்கும் கும்பல்களின் செல்வாக்கும் சக்தியும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழுக்களில் இணைந்து செயற்படும் பல இளைஞர்கள் வீடுகள் அற்ற நிலையில் வளர்ந்து வருவதாகவும் மோசமான பாடசாலை செயல்திறன் மற்றும் பெரும்பாலும் பின்தங்கிய சுற்றுப்புறங்களில் வாழ்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஒரு அரசியல்வாதி உண்மையில் நிலைமையை மாற்ற விரும்பினால் அவர்கள் மிகவும் கடினமான சமூக மற்றும் தலைமுறை இடையில் பணியாற்ற வேண்டும் என சமூகவியலாளர் லாரன்ட் முச்சியெல்லி தெரிவித்துள்ளார்.