ரணில் – பசில் சந்தித்துப் பேச்சு: மிலிந்த மொரகொடவும் பங்கேற்பு

0
61

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் நேற்று (04) பிற்பகல் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

பெஜெட் வீதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவும் கலந்துகொண்டார்.

கடந்த மே தினம் குறித்தும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் இந்த சந்திப்பில் போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு இடையில் அண்மையில் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதுடன் அது அரசியல் அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பசில் ராஜபக்சவுடனான நேற்றைய கலந்துரையாடல் மிகவும் சுமுகமானதாக அமைந்ததுடன் எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் நல்லதொரு புரிதலை ஏற்படுத்த இந்த கலந்துரையாடல் பெரிதும் உதவியுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.