ஹமாஸின் போர் நிறுத்த கோரிக்கை: இஸ்ரேல் நிராகரிப்பு

0
43

காசா போரை நிறைவுக்கு கொண்டு வர வேண்டும் என இஸ்ரேலுக்கான ஹமாஸின் கோரிக்கையை ஏற்கபோவதில்லையென பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு பதிலாக காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை இடைநிறுத்துவது தொடர்பாக எகிப்து மற்றும் கத்தாரின் தூதுவர் கெய்ரோவில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் போது 40 நாட்கள் போர் இடைநிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பலஸ்தீனிய கைதிகளை விடுவிப்பது குறித்து கலந்துரையாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் ஹமாஸ் கோரிக்கையை நெதன்யாகு நிராகரித்துள்ளதுடன் ‘‘காஸாவை ஹமாஸ் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எனவும் முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக அமையும்” எனவும் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக பணயக்கைதிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்து பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபடுபட்டனர்.

மேலும் சிலர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மோதலை நீடிப்பதை நோக்கமாக கொண்டுள்ளார் எனவும் குற்றம் சுமத்தி வரும் நிலையில் பிரதமர் நெதன்யாகுவின் இவ்வாறானதொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.