நடராஜனுக்கு தங்க சங்கிலி வழங்கியுள்ள ஐதராபாத் அணி: வைரலாகும் புகைப்படம்!

0
216

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சாளருக்கு அணி சார்பாக தங்க சங்கிலி பரிசளிக்கப்பட்டுள்ளது. டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை கைப்பற்றியமைக்காகவே தங்க சங்கிலி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 20ஆம் திகதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது.

தமிழக வீரர் நடராஜன்

அதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் தமிழக வீரர் நடராஜன் 19 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும்.

இந்த போட்டியின் வெற்றிக்கு நடராஜன் முக்கிய காரணமாக அமைந்தார்.அத்துடன் அவரின் சிறந்த ஐபிஎல் பந்துவீச்சாக இது அமைந்துள்ளது.

 80 சவரன் தங்க சங்கிலி 

இந்த நிலையில் சன்ரைசர்ஸ் அணி சார்பில் நடராஜனுக்கு 80 சவரன் தங்க சங்கிலி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சங்கிலி ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படும் வீரருக்கு சுழற்சி முயற்சியில் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது தங்க சங்கிலியை வென்ற நடராஜன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுகிடையிலான போட்டியில் அணி வீரர் ஹென்சிர்ச் கிளாசன் சிறப்பாக செயற்பட்டமைக்காக கனமான தங்க சங்கிலி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.