கெஹலிய உள்ளிட்ட 9 சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல்

0
43

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 சந்தேகநபர்களும் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போதே மாளிகாகந்த நீதவான் லோசினி அபேவிக்ரம இந்த உத்தரவை பிறப்பித்தார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி முன்வைத்த பிணை கோரிக்கை இதன்போது நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவக்கப்படுகின்றது.