‘சிஐடியில் இன்று முன்னிலையாகவுள்ள மைத்திரி’

0
58

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்  இன்று (25) முன்னிலையாகவுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில்  தனக்கு தெரியும் என கண்டியில் வைத்து  மைத்திரிபால சிறிசேன அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

குறித்த அறிக்கை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தார்.

இதன்படி, வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 10.30 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.