யாழில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு!

0
150

யாழ். கட்டைக்காட்டில் வீடொன்றில் போதை பொருள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மருதங்கேணி பொலிஸார் நேற்று(26) மதியம் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது நீண்ட நேர தேடுதலில் ஈடுபட்ட பொலிஸார் எதுவும் கிடைக்காததால் திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு நாட்களுக்கு முன்பு கடத்தல்காரர்கள் கைவிட்டுச் சென்ற கஞ்சா பொதிகள் கரையொதுங்கியதை அடுத்து அதில் சிலவற்றை கடற்படையினர் மீட்டுள்ளதோடு கரையொதுங்கிய பல பொதிகளை சிலர் கடத்திச் சென்றதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கட்டைக்காட்டில் மருதங்கேணி பொலிஸாரால் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு தேடுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.