அதிவேக நெடுஞ்சாலை வருவாய் அதிகரிப்பு: ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச தொகை

0
176

நீண்ட விடுமுறை காரணமாக அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பெறப்பட்ட வருமானம் சுமார் 40 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த 22 ஆம் திகதி மாத்திரம் 140,791 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்கமைய 46,457,600 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அதிவேக நெடுஞ்சாலை ஊடாக ஒரே நாளில் பெறப்பட்ட அதிகூடிய வருமானம் இதுவாகுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.