உக்ரைன் ராணுவத்தில் இணைய இலங்கை படையினர் ஆர்வம்

0
139

இலங்கை இராணுவத்தில் இருந்து வெளியேறிய சுமார் 70 முன்னாள் இராணுவ வீரர்கள், உக்ரைன் இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்திலிருந்து சட்ட ரீதியாக விலகியவர்களே இதற்கு விண்ணப்பித்துள்ளனர். உக்ரைன் படையில் இணைந்து கொள்ளும் வீரர்களுக்கு 1 மில்லியன் ரூபா முதல் 12 மில்லியன் ரூபா வரையில் மாதாந்த சம்பளமாக வழங்கப்படுகின்றது.

ஏற்கனவே உக்ரைன் இராணுவத்தில் 20 இற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில் இலங்கை வீரர்கள் பலர் உக்ரைன் இராணுவத்தில் இணைய விண்ணப்பித்துள்ளனர்.

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் படையினர் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை தேடிச் செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.