அனுஷ்கா சர்மாவுக்கு வாழ்த்துக் கூறிய சச்சின்

0
219

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் விராட் கோலி படைத்திருந்த நிலையில் போட்டியை பார்வையிடவந்த இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கார் மைதானத்தில் இருந்த விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை நேரில் சென்று வாழ்த்தினார்.

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்காரின் சாதனை முறியடித்தே இந்த சாதனையை விராட் கோலி படைத்திருந்தார்.

463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்த சச்சின் டெண்டுல்கார் 49 சதங்களை பெற்றிருந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் 50ஆவது சதத்தை அடித்ததன் மூலம் விராட் கோலி 290ஆவது ஒருநாள் போட்டியிலேயே இந்த சாதனையை முறியடித்துள்ளார். மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களும் கோலிக்கு வாழ்த்து மழையை பொழிந்திருந்தனர்.