இலங்கையில் இடம்பெற்ற நாம் 200 நிகழ்வுக்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி உரையை கடைசி நிமிடத்தில் சேர்ப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் ஆட்சேபனை காரணமாக ஒளிபரப்ப முடியவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.
ஸ்டாலினின் காணொளி உரை
இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் உரையாற்றினார். இந்நிலையில் ஸ்டாலினின் காணொளி உரை உள்ளூர் ஊடகங்களுக்கு அமைப்பாளர்களால் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் மூலம் எழுத்து பிரதி தமிழகத்திலும் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.