ஜோவிகாவை கடுமையாக எச்சரித்த கமல்…(video)

0
164

நேற்றைய தினத்தில் ஜோவிகாவை காப்பாற்றிய கமல்ஹாசன் அவரை கடுமையாக எச்சரித்தும் உள்ளார்.

பிக்பாஸ்

பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார்.

பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது.

சில தினங்களுக்கு முன்பு விசித்ரா, ஜோவிகாவிடம் அடிப்படைக் கல்வி கற்க வேண்டும் என்று அட்வைஸ் கொடுத்து அது கடைசியில் சண்டையில் சென்று முடிந்துள்ளது.

இதிலிருந்து ஜோதிகா சமூகவலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகின்றார். மேலும் இவர் செய்யும் சின்ன சின்ன விடயங்களைக் கூட ரசிகர்கள் காணொளியாக வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினத்தில் கமல்ஹாசன் ஜோவிகாவை காப்பாற்றினார். பின்பு அவர் பலரையும் வீட்டில் ஒருமையாக பேசுவதால் கடுமையாக எச்சரித்துள்ளார்.