JVP இன் தலைவர் அனுரவுக்கு சுவீடனில் அமோக வரவேற்பு!

0
39

ஜே.வி.பி இன் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று சனிக்கிழமை (27) காலை சுவீடனின் ஸ்டாக்ஹோம் (STOCKHOLM) விமான நிலையத்தை சென்றடைந்தார். விமான நிலையத்தில் அநுரவுக்கு சுவீடனில் வசிக்கும் இலங்கையர்களால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

அநுர குமார திசாநாயக்க நேற்று முன்தினம் வியாழக்கிழமை (25) இரவு இலங்கையிலிருந்து சுவீடனுக்கு பயணமானார். இந்நிலையில், சுவீடனில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் சினேகபூர்வமான சில ஒன்றுகூடல்களிலும் அவர் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி, இன்று சுவீடனில் NACKA AULAஇல் அந்நாட்டின் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு STOCKHOLM மக்கள் சந்திப்பை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இவ்வருடம் இடம்பெறவுள்ள நிலையில் ஜே.வி.பி இன் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெளிநாடுகளுக்கு தொடர் பயணங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.