கொழும்பில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்ற  தகவலை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள் இல்லை – TID

0
184

கொழும்பில் உள்ள முக்கிய இடங்களில் எதிர்வரும் சில நாட்களில் தொடர் குண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக கிடைத்துள்ள தகவலை உறுதிப்படுத்தக்கூடிய சாட்சியங்கள் முன்வைக்கப்படவில்லை என பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேகரவிடம் நேற்று அறிவித்துள்ளனர்.

சிறைச்சாலை கைதி ஒருவர் சிறைச்சாலை பேருந்தில் இருந்து வெளியில் வீசிய துண்டு காகிதம் ஒன்றில் இது தொடர்பான தகவல் கிடைத்ததாக கூறி பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இதனை ஆராய்ந்த நீதிமன்றம் தகவல் தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்தி உடனடியாக அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு அமைய விசாரணைகளை நடத்திய பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நேற்று நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்திருந்தனர்.

இதனையடுத்து கொழும்பில் உள்ள முக்கிய இடங்களில் தொடர் குண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது எனக்கூறி தாக்கல் செய்த அறிக்கையை திரும்ப பெறுவதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிவித்து. இதனை ஏற்றுக்கொண்ட நீதவான் அறிக்கையை திரும்ப பெற அனுமதி வழங்கினார்.