தமிழ் எழுத தெரியாது! அதிரடி காட்டிய ஜோவிகா; உறைந்து போன விசித்ரா

0
342

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இந்த 5 நாட்களில் அடுத்தடுத்த சர்ச்சைகளையும் போட்டிகளையும் சவால்களையும் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் ஜோவிகா மற்றும் விசித்ரா இடையில் மிகப்பெரிய வாக்குவாதம் நடப்பதை பார்க்க முடிகிறது. முன்னதாக ஜோவிகா தன்னுடைய படிப்பை பாதியிலேயே நிறுத்தியது குறித்து விசித்ரா அறிவுரை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் ஜோவிகாவை தமிழில் எழுதி காட்டுமாறு விசித்ரா கூற எனக்கு தமிழ் எழுத தெரியாது. எனக்கு வரவில்லை என்று தானே படிப்பை நிறுத்தினேன் என்று அதிரடியாக கூறுகின்றார்.

படித்து தான் வாழ வேண்டும் என்று அவசியம் கிடையாது என்று அவர் பேசியிருக்கும் வார்த்தைகள் பார்வையாளர்களின் ஆதரவை குவித்து வருகின்றது.

பிக்பாஸ் என்றாலே வனிதா விஜயகுமார்தான் நினைவிற்கு வருவார். அந்த அளவிற்கு அதிரடியாக பேசி, நடந்து கொண்டவர் அவர். அவருடைய மகளான ஜோவிகா அவரையும் மிஞ்சும் அளவு அதிரடி காட்டி மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.