9 குழந்தைகள் உள்ள நபரை மறுமணம் செய்த 11 குழந்தைகள் உள்ள பெண்!

0
187

பாகிஸ்தானில் 11 குழந்தைகளுக்கு தாயான பெண்ணுக்கும் 9 குழந்தைகளுக்கு தந்தையான நபருக்கும் மறுமணம் நடந்துள்ளது. நவாப்ஷாவை சேர்ந்த 43 வயதான பெண் ராணி பென். அதே ஊரை சேர்ந்தவர் 45 வயதான சேத்தன்.

ராணிக்கு 11 குழந்தைகளும், சேத்தனுக்கு 9 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் ராணியை அவர் கணவர் குடும்பத்தார் துன்புறுத்தி வீட்டை விட்டு துரத்தியுள்ளனர்.

அவருக்கு சேத்தன் அடைக்கலம் கொடுத்த நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. தொடர்ந்து இருவருக்கும் நீதிமன்றத்தில் திருமணம் நடந்தது.

மணமகன் கூறுகையில், நான் ராணியை கடத்தி வந்ததாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை. எங்களுக்கு கொலை மிரட்டல்கள் வருவதால் பாதுகாப்பு தர வேண்டும் என கூறியுள்ளார்.