வேலை வாய்ப்புகளை பெற்று இலங்கை விட்டு வெளியேறிய 5 ஆயிரம் பேர்!

0
167

இலங்கையில் இருந்து இந்தாண்டு மட்டும் தொழில் வாய்ப்புகளை பெற்று கொரியாவிற்கு சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்த ஆண்டு இது வரையிலான காலப்பகுதியில் 5,091 பேர் தென்கொரியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்று அங்கு சென்றுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கொரிய மனித வளத் திணைக்களத்துடன் இணைந்து ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட 200 தொழிலாளர்களை கொரியாவுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது.

உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்றைய தினம் (03-10-2023) தென்கொரியாவுக்கு பயணமாகியுள்ளார்.

இந்த பயணத்தின்போது இலங்கை மக்களுக்கு மேலும் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக அந்நாட்டு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்பார்த்துள்ளார்.