இசைக்கு எல்லையே இல்லை! காலில் விழுந்த பாடகர் ஸ்ரீநிவாஸ்; அசானி முதல் அரங்கத்தை உறைய வைத்த குட்டிஸ்

0
177

சரிகமப நிகழ்ச்சியில் நிஷா கவின் இசையில் சிலிர்த்து போன நடுவர் ஸ்ரீநிவாஸ் மேடைக்கு வந்து காலில் விழும் காட்சிகள் இணையத்தினை ஆக்கிரமித்துள்ளது.

இசைக்கு மயங்காத இதயங்கள் எதுவுமே இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. அந்த இசை என்ற மாபெரும் உலகத்துக்கு, இனம், மதம், நாடு, மொழி மற்றும் இல்லை வயது என்ற எல்லைகள் எதுவுமே இல்லை.

நிஷா கவின் குரலை கேட்டதும் பாடகர் ஸ்ரீநிவாஸ் சிலிர்த்து போய் அசையாமல் அப்படியே நின்று விட்டார். இது குறித்த காணொளிகள் இணையத்தில் ஆக்கிரமித்து வருகின்றது.

அதேபோல ஞாயிற்றுகிழமை ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் இலங்கை சிறுமி அசானியின் பாடலை கேட்டு தொகுப்பாளினி அர்சனா துள்ளி குதித்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சரிகமப நிகழ்ச்சியில் இறுதி கட்டத்தினை நெருங்கி கொண்டிருப்பதால் ஒவ்வொருவரும் தங்களின் அதிரடி திறமையை வௌப்படுத்தி வருகின்றனர். யார் வெற்றியாளர் என்பதை பார்வையாளர்களினால் கணிக்க முடியாது உள்ளது.