முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா பதவி விலகிய விவகாரம் நாட்டில் எஞ்சி இருந்த சட்ட ஆட்சிக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நீதிபதியில் விலகல் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கு உடனடியாக நாடு திரும்பி பதிலளிக்க வேண்டும் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினமும் இந்த விடயம் தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
#சட்டத்தின்_ஆட்சி என்பது "#அதிகார_பகிர்வு", "#பொறுப்புக்கூறல்" என்பன போன்ற #மாற்றுக்கருத்துகள் கொண்ட விஷயமல்ல. இங்கே #முல்லைத்தீவு #மாவட்ட #நீதிபதி #சரவணராஜாவின் உயிருக்கு அச்சுறுத்தல். நாட்டில் எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச "#சட்ட_ஆட்சி"க்கும் நேரடி சவால். #ஜனாதிபதி #ரணில், உடன் நாடு… pic.twitter.com/TxVJeo8O0B
— Mano Ganesan (@ManoGanesan) September 28, 2023