கிழக்கு ஆளுநருக்கு எதிராக பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்!

0
204

திருகோணமலை – இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொருலுகந்த ரஜமகா விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகள் மற்றும் சில பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று (28.08.2023)  ஏ6 பிரதான வீதியை வழிமறித்து கிழக்கு ஆளுநருக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் குறித்த தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இடைநிறுத்தப்பட்ட கட்டுமானங்கள்

இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இடம்பெற்று வந்தநிலையில் இது தொடர்பாகவும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் விகாரை அமைப்பதற்கு எதிராக தமிழ் மக்களினால் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஜனாதிபதியினால் அப்பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையின் கட்டுமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

காலாகாலமாக தமிழ் மக்கள் வாழுகின்ற பகுதிக்குள் விகாரை அமைதால் அது இன முறுகலை ஏற்படுத்தும் என்ற வகையிலும், இன நல்லிணக்கத்தை பாதிக்கும் என்ற வகையிலும் தமிழ் மக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டதன் காரணத்தினாலேயே விகாரையின் கட்டுமானங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery
Gallery